Monday, September 5, 2016

பாமரன் பரிணமிக்கிறான்

பாமரன்  பரிணமிக்கிறான்
உலகிலே
 பணத்துடன், ஆளுமையுடன்
ஒரு வழியில்
 வசதி மிக்க குடும்பத்தில்
பிறந்ததாலே!
.

நல்வழியில் செல்லாமல்
 கோணலாகப்   போகிறான்
 ஆத்திரத்துடனும் ஆற்றாமையுடனும்
அவனுக்குத் தெரிந்த
  தடத்திலே!

பணம் ஒன்றே குறிக்கோளாக
பண்பை    என்றும்
நாடாமலே
 பயணிக்கிறான்  வேகமாக
விளைவறியாமலே!

அழியும் செல்வம்
 எத்தனை  நாளைக்கு
என்று அறியாமலே
வாழ்கிறான் ஒரு
பதராகவே!








No comments:

Post a Comment