Saturday, September 10, 2016

பட்ட மரம் துளிர்க்காது!

பட்ட மரம் துளிர்க்குமா?
ஆராய்ச்சி எதற்கு?
எனில்
சில நோக்கங்களுக்காக!

 செத்தவன் எழுவானா ?
 வரி காட்டுவானா?
 கட்டினான்
 எனக்கு தெரிந்த
 ஒருவன்.

அவன் உயிர்பிக்கப்பட்டானா?
 அருவமாக வந்தானா?
 அவனுக்கே வெளிச்சம்.

வந்தவன் கட்டினான்
 அதற்குரிய காசோலையைக் கொடுத்து
 கட்டினதற்கு  அத்தாட்சியை
 வாங்காமல் சென்று விட்டான்
பரலோகத்துக்கு மீண்டும்.

என்னே ஒரு பித்தலாட்டம்
 இதற்குப் பின்னும்
சொல்லுங்கள் ஏன்
பட்ட மரம் துளிர்க்காது
என்று?




No comments:

Post a Comment