Wednesday, September 21, 2016

தண்ணீருக்காகவா இவ்வளவு

தண்ணீர் தண்ணீர் 
 என்று புலம்பி 
 தடியடி  வன்முறை 
 எங்கும் பெருக.

 வழக்குரைக்க 
 நீதிமன்றங்கள் 
என்று தாண்டி ஓட.

தண்ணீரை  ஓட விடாமல்
அடக்கி  அணைகளில் தேக்கி 
பறறாக்குறை   என்று  மனிதன் 
 ஓலமிட.

 பயிரை வளர்த்து 
 நீர் வரத்து இல்லாமல் 
அவை வாட..
 
 மனமிழந்து 
 தன்னுயிரை  விட்டு 
 கதறுகிறான்  மனிதன்
இன்னொரு எல்லையில். 

.
 
உ யிர்ச் சேதம், பொருட் சேதம் 
 இழப்பு  என்று மக்கள் திக்குமுக்காட
 
 நினைத்துப் பார்த்தால் 
 தண்ணீருக்காகவா  இவ்வளவு 
என்று மயங்கி 
 துவள்கிறது  நெஞ்சம். 


 

No comments:

Post a Comment