Friday, September 9, 2016

எத்தனை பேரோ?

கண்ணிலே விளக்கெண்ணெய்
 ஊற்றி
 குற்றத்தை  துழாவிக்
 கண்டறிந்து.

காலிலே வெந்நீர் ஊற்றி
அங்குமிங்கும்
 நிலை கொள்ளாமல்
ஒடி

கண் பார்க்க கை
 செய்து
இயலாததையும்  இழுத்து
முடித்து

திரை கடலோடி திரவியம்
தேடி
 திரட்ட முடியாத  செல்வத்தை
திரட்டி



வாழ்ந்தேன்  என்று பெருமிதம்
பொங்க
நிறைவோடு  வாழ்கிறவர்கள்
 எத்தனை பேரோ?
 

No comments:

Post a Comment