Sunday, August 28, 2016

எந்த நன்மையையும் இல்லாமல்

காலமும் பொழுதும் போக 
 வயதும் கூட 
 இளைஞன் இன்று முதியவன் 
 குழந்தை இன்று  மனிதன் 
மாறும் யாவையும்  வேகமாக 
ஒன்று மட்டும் மாறவேயில்லை 
 அது ஒரு குடும்பத்தின்  சொத்துக்கள் 
 வழக்கு வ ம்பு கணக்கு 
 என்று பல விதம் 
 பஞ்சாய்த்து   எல்லாவிதமும் 
 குறையில்லாமல்  ஆண்டுகள் 
 உருண்டோட நடக்கின்றன
 பணமும் நேரமும் உழைப்பும் 
முயற்சியும்  விரயமாக 
 யாருக்குமே எந்த நன்மையையும் 
 இல்லாமல் .

ஒரு மனிதனின்  புரியாத்தனத்தால்.

 

No comments:

Post a Comment