Thursday, June 2, 2016

கல்யாண வைபோகமே

பலகாரமும், பாயசமும்
 பனியாரமும், பொரியலும்
சட்னியும், அவியலும்
சாம்பாரும்,  ரசமும்
சாதமும்,  கூட்டும்
இரண்டு நாட்கள்  
மூன்று  வேளையிலும்
 விமர்சையாக வழங்கப் பெற
திருமணம் தடபுடலாக நடைபெற
 சமையற்  கலைஞரும்    பல
 இலட்சம் சன்மானமாகப் பெற
 சில்வர் சாமான்கள் சிறிதும், பெரிதுமாக
பல வகையில்  அன்பளிப்பாக
 வழங்கப் பெற
 ஒரு சமுகம் செலவு செய்யும்
வினோதம்.

அதே மக்கள் சாதாரண நாளிலே
 கிழிந்த பாயில் படுத்து,
 நடையன் இல்லாமல் நடந்து,
எளிமையான் உணவை உண்டு
 விட்டிலே ஒரு  சிறு பகுதியில் இருந்து கொண்டு
ஏனையப் பகுதியை வாடகைக்கு விட்டு
 வாழும் விதம் ஆச்சரியமே!

கல்யாண வைபோகமே

















No comments:

Post a Comment