Saturday, April 30, 2016

ஏனோ எனக்கு

திரைப்படம் பார்ப்பதில்லை
 ஏனோ எனக்கு  அவை
 புரிவதில்லை.

காதல் அறிந்ததில்லை
 ஏனோ எனக்கு அவை
 புரிந்ததில்லை.


கோபம் வந்து  போகும்
ஏனோ எனக்கு  அவை
 நிலைத்ததில்லை.


ஏமாற்றம்  நிறைய கண்டேன்
 ஏனோ எனக்கு அவை
 நிலைத்ததில்லை.

ஒதுங்குவேன்  பிடிக்காத போது
 ஏனோ எனக்கு   அவை
 மாறாது என்றும்.







No comments:

Post a Comment