மோகன இராகம் தவழ்ந்து ஓட
சில் நேரம் விர்ரென்று பாய
மேலே ஏறி குதித்து ஓட
கிழே இறங்கி சுற்றி வர
மத்திமத்தில் நின்று அசை போட
நெஞ்சை உருக்கி கனிந்து உருக
கண்களில் நீர் கசிந்து வழிய
சிலை போல் ஆடாமல்
அசையாமல் நின்று
கரைந்ததது மனம்.
No comments:
Post a Comment