அலைகள் பாய்ந்து
முன்னே கரையை
தொட்டும் தொடாமலும்
நின்று ஓட.
அப்பொழுதே அலைகள்
பின்னால் இழுத்து போக
பட்டும்படாமலும்
நின்று ஓட
பொழுதுகளில் அலைகள்
தவழ்ந்து அழகாக
நளினமாக விளையாட
தத்தி தத்தி
நேரங்களில் அலைகள்
ஆவேசமாக ஆத்திரமாக
கோரமாகத் தாண்டவமாட
ஊ வென்றும் ஓ வென்றும்
வாழ்வின் நிகழ்வுகள் போலே
நல்லதும் கெட்டதும்
கூடவே ஒன்றுக்கொன்று
ஏற்றமும் இறக்கமுமாக .
அலை போலே என்று
வாழ்வும் அதுவே என்று
கொண்டு கருதுவோம்
யாவற்றையும் .
No comments:
Post a Comment