Tuesday, April 12, 2016

கருதுவோம் யாவற்றையும்

அலைகள் பாய்ந்து 
 முன்னே கரையை
 தொட்டும் தொடாமலும் 
 நின்று ஓட.


அப்பொழுதே அலைகள் 
 பின்னால் இழுத்து  போக 
 பட்டும்படாமலும் 
நின்று ஓட 

பொழுதுகளில்   அலைகள் 
 தவழ்ந்து அழகாக 
 நளினமாக விளையாட 
தத்தி தத்தி 

நேரங்களில் அலைகள்  
 ஆவேசமாக  ஆத்திரமாக
 கோரமாகத் தாண்டவமாட 
ஊ வென்றும் ஓ வென்றும் 


வாழ்வின்  நிகழ்வுகள்  போலே 
 நல்லதும் கெட்டதும் 
கூடவே ஒன்றுக்கொன்று 
 ஏற்றமும் இறக்கமுமாக .


 அலை போலே என்று 
 வாழ்வும் அதுவே என்று 
 கொண்டு கருதுவோம் 
யாவற்றையும் .






 
 

No comments:

Post a Comment