Wednesday, April 13, 2016

பால்காரர் மணி பார்த்து.

பால்காரர் மணி  பார்த்து 
 வருவதில்லை நேரம் 
 அவருடையதே 

காலை என்பது 
 மணி பத்தரை 
வருவார் வேகமாக 
.
மோட்டார்  பைக்கில் 
விதியில் நுழைந்து
பால் பையை 
 

மதில் மிது வைத்து 
 ஒரு சத்தம் கொடுத்து  
 பறந்து விடுவார் .

சில பல நாட்களில் 
 எனக்கு முன் 
 வானரங்கள்  கவ்வி விடும் .

பையை அழகாகக் எடுத்து  
 முடிச்சை தளர்த்தி 
உறிஞ்சும்  பாலை நேர்த்தியாக .

 செயலற்றுப் போய் நிற்பேன் 
கையில் கம்புடன்   
 எனது தேநிரில்  மண் 
 குரங்குகளுக்கு   வெகு தாராளமாக 
 

 

No comments:

Post a Comment