பால்காரர் மணி பார்த்து
வருவதில்லை நேரம்
அவருடையதே
காலை என்பது
மணி பத்தரை
வருவார் வேகமாக
.
மோட்டார் பைக்கில்
விதியில் நுழைந்து
பால் பையை
மதில் மிது வைத்து
ஒரு சத்தம் கொடுத்து
பறந்து விடுவார் .
சில பல நாட்களில்
எனக்கு முன்
வானரங்கள் கவ்வி விடும் .
பையை அழகாகக் எடுத்து
முடிச்சை தளர்த்தி
உறிஞ்சும் பாலை நேர்த்தியாக .
செயலற்றுப் போய் நிற்பேன்
கையில் கம்புடன்
எனது தேநிரில் மண்
குரங்குகளுக்கு வெகு தாராளமாக
No comments:
Post a Comment