Wednesday, April 13, 2016

செல்லாக் காசு

மனிதனுக்கு  காசு
 என்றால் ல் ஒரு வேகம்.

எங்கு என்று தேடுவான்
 ஓடுவான் பறப்பான்.

அடித்துக் கொள்வான்
பறிப்பான் புடுங்குவான்

தாய் தாரம் என்றும்
 அண்ணன் தம்பி

பிள்ளை பெண் என்றும்
நியாயம் அநியாயம்

அவனிடமில்லை எதிலும்
 காசே தான் எல்லாம்.


காசிலே ஏது  மையல்
காகிதம் என்று நினைத்தால் .

பொருளிலே எங்கே அழகு
அழிவது என்று எண்ணினால் .


உயிரிலே ஏன் ஆசை
மண்ணோடு போவது என்று தெரிந்தால்.


வாழ்வே ஒரு செல்லாக் காசு
செல்வதும் செல்லாததும்

மனம் போலே என்று தெரிந்தால்
 நப்பாசை அற்றுப் போயின்,


 





 


No comments:

Post a Comment