Monday, April 25, 2016

பேச்சை வம்பாக்குவான்

பேச்சை வம்பாக்குவான்
 வம்பை    வழக்காக்குவான்
 வழக்கை  சண்டையாக்குவான்
சண்டையை  கலகமாக்குவான்
கலகத்தை  போராக்குவான்
 போரில் உயிரிழப்பு
 குருதி  வெள்ளம்
 காயம்  சேதம்
பொருளிலே  வாழ்விலே.

 எவ்வாறு ஒரு சிறு பொறி
 அனல் வாரிக் கொட்டி
காட்டுத்  தீயாகப் பரவி
அழிவை உண்டாக்குவது  போல
 ஒரு சொல் வெடித்துச் சிதறி
திரிந்து  மலிந்து ஒன்று பலவாகி
உலகமே   அசைந்து அசந்து
 வாழ்வே  மறித்து மறைந்து
சேதமே  யாவற்றிலும்  காணலாம்.


No comments:

Post a Comment