Wednesday, April 27, 2016

கண் கொள்ளாக் காட்சி

கயிலை மலையிலே
 பனி வாசம்  வெகுவாக
 வெள்ளிமலை  சாரலில்
 அழகாக மின்ன
 வெள்ளிப் பனி
 பாறையெல்லாம்
கனிந்து நிரம்ப
கண் கொள்ளாக்
 காட்சி  கண் நிறைய.


குளிரும் பனியில்
 கதிரவன்  எழும்ப
 இருட்டும்  வெளிச்சமும்
 விட்டும் விடாமலும்
 மப்பும் மந்தாரமுமாக
வெண் போர்வை
மெல்ல மெல்ல விலக
கண் கொள்ளாக்
காட்சி  கண்  நிறைய.


வெளிறிய போது
 மஞ்சள்  முகத்தான்
பட்டும் படாமலும்
 பகட்டும் பகட்டாமலும்
அசையாமல்   மௌனமாக
 வெளி வரும் தோற்றம்
மனதிற்கு  ஈடொ ன்னா
அமைதியை நல்க
கண்  கொள்ளாக்
 காட்சி கண்  நிறைய.








  

No comments:

Post a Comment