Tuesday, April 5, 2016

கோபமும் தாபமும்.

கோபம் தாண்டி வந்தான்
 தாவித் தவ்வி நுழைந்தான்
 கத்தி குத்தி வதைத்தான்.


கோபம் தலைக்கேற வந்தான்
கண் சிவந்து புகுந்தான்
மனம் நோகச்   சாடினான்.

 கோபம்  அடங்காது  ஆடினான்
உடல் முறுக்கேறி  குதித்தான்
 தாண்டவமாடினான்  கோரமாக,


விழித்தனர் குடும்பத்தினர்
நின்றனர்  சற்று நேரம்
 மனம் துணுக்குற.

நடந்தனர் அவ்வி டம் அகன்று
இது ஒரு பழகிய பழைய
 ஆட்டம் புதிதன்று.



கத்தட்டும் முடிந்தவரை
ஆடட்டும் இயன்றவரை
போகட்டும் அவனோடு
 கோபமும் தாபமும்.

  


No comments:

Post a Comment