Thursday, April 28, 2016

புத்தகமே துணை

எரிச்சல் உள்ளத்திலும்
 உடம்பி லும் ஒரு சேர
 தன்னாலே ஒரு மாதம்
அதற்கு மேலேயும்
 சமையல், துவை த்தல்
மடித்தல், படுத்தல்
 என்ற செய்து கொண்டே
 இயந்திர வாழ்க்கை
 மனதை நெருட

காலம் முன்  நினைத்தால்
 மகன்களோடு படித்து
 விளையாடி , தூங்கி
 அடுத்து என்ன என்ற
 எதிர்பார்ப்புடன்  வாழ்ந்தது
 மனதிலே தோன்ற
 பெருமூச்சுடன்   சாய்ந்து
 கடந்த காலங்கள்
மனதில் நெருட


கண்ணீர்  பெருக்கெடுத்து
 ஒரு தனி மரமாக
 நிற்கும் வேளையில்
யாரிடம் பேசுவது
 யாரைப் பார்ப்பது
 என்ற எண்ணம்
தலை தூக்க
 புத்தகமே துணை
என்று அணைத்துக் கொள்ள





No comments:

Post a Comment