Friday, April 8, 2016

ஏகாந்தம்

ஏகாந்தம்  எனில்
ஒரு சக்தி 
 எங்கும்  ஒளி 
யாவும் அமைதி 
 பரவலான  ஆனந்தம் 
பேரானந்தம்  
ஒரு நிர்ச்சலனாமான
பேருவகை .


கண்டேன் அச்சுகத்தை 
 ஒரு நாள் யானும் 
என் குழந்தைகள்  மட்டும்  
 கொஞ்சவில்லை 
பேசவில்லை  
நோக்கினேன் அவர்களை  
நேரம் அறியா  வண்ணம் 
அடைந்தேன் பேருவகை 
ஏகாந்தம்   அதுவே.




No comments:

Post a Comment