கண்கள் கரு விழிகள்
அச்சம் சூழ
நோக்குகிறேன்.
இரு கண்கள்
பொறாமையை உமிழ
என் முன்னால் .
இரு கண்கள்
ஆத்திரத்தைக் கொட்ட
என் பின்னால்.
இரண்டுக்கும் நடுவே
என் கண்கள் முழிக்க
பயத்துடன்.
கண்களுக்கு ஒரு சக்தி
அதிதமான் வலிமை
பார்வையில்.
வீரியம் கொல்லும்
அக்கணமே
அடிப்படையிலே.
விலகி விடு என்ற
கூச்சல் அருகிலே
நல்லதற்காகவே.
ஒடி விடு என்ற
கூவல் தொலைவிலே
நன்மைக்காகவே
எனக்கு மட்டும் அல்ல
உனக்கும் உலகத்தாருக்கும்
ஒரு படிப்பினையே!
No comments:
Post a Comment