செல்வம் கண்டேன்
புல்லிலே அதிகமாக.
புல்லின் நிறத்தில்
பச்சை பசேலென்று .
புல்லின் உறுதியிலே
மிருதுவான கடினம்.
புல்லின் தன்மையிலே
எங்கும் எவ்வாறும்.
புல்லின் ஏற்றத்திலே
பரவலாக முழுவதும்
புல்லின் மனப்பான்மையிலே
எதிலும் குறை காணாத
புல்லின் எடுப்பிலே
மிடுக்குடன் எளிமையாக
புல்லின் வழியிலே
நலம் காண.
புல்லின் தடத்திலே
வெற்றிக் காண்
புல்லே என்றில்லாமல்
புல்லோ என்று
விமர்சையாக.!
No comments:
Post a Comment