முகம் பார்த்து
பரிமாறுவாள்.
இலைப் பார்த்து
நிரப்புவாள்.
கை நிறைய
வைப்பாள்.
ஒரு தடவை
மறு தடவை.
மேலே . மேலே
கேட்காமலே .
பசித்தார் பால்
அன்பு
சகியாள் தாமதம்
அப்போதே
அன்னபூரணி அவள்
அமுதம்.
.
படித்தவள் மேற்படிப்பு
பட்டம் .
சிறந்தவள் யாவற்றிலும்
தொழில்.
அளவான குடும்பம்
அழகாக
அமைதியான் பேச்சு
அடக்கம்.
வாழ்கிறாள் அமோகமாக
எண்பத்தியாறில்
No comments:
Post a Comment