Saturday, April 23, 2016

கடுவன் பூனையாக.

பேசினான் என்பதோடு
 வெடித்தான்  குமறி னான் என்பதே
நியாயம் .


வெடித்தது எதற்காக?
கொழுந்து விட்டு எறிந்த
பொறாமைத் தீ.

பொருமினான் நேரமாக
ஒன்றல்ல ஒராயிரம்   மணியாக
வெந்த மனம்.


விளம்பினான் எல்லாரிடமும்
தன்னுடைய ஆத்திரத்தை  முழுதாக
கனல் புகைய.


என்னவென்று சொல்வது
அவன் தன் இயலாமையை
கடுவன் பூனையாக.








No comments:

Post a Comment