Thursday, April 28, 2016

மலர்ந்த மாணிக்கமாக

அகமும் புறமும் நன்றே திகழ
தூய்மை  ஒருங்கே அமைய

மனம்  சலனமே இல்லாது இருக்க
ஆத்திரம்  மறுக்க பொய் அறுக்க

துப்பரவு  என்று தொடங்க  நினைக்க
தனது என்ற எண்ணம்  ஓங்க

பார்வையிலே அன்பும் பண்பும் வெளிப்பட
 மனதில் மகிழ்வு அதிகம் பொங்க.

சுற்றுப்புறம் அழகும் ஒழுங்கும் மேம்பட
மனதிலே  அதிர்வு  வெகுவாகக் குறைய

அகத்தில் அழகு புறத்த்தில்   தெரிய
மலர்ந்த மாணிக்கமாக  தெளியுமே
இவ்வுலகு.





No comments:

Post a Comment