Friday, April 15, 2016

கண்டான் எதை

ஒரு வழியாக நினைத்தது நடந்தது
 நினைத்தது என்று சொல்ல  முடியாது
 எதிர் பார்தத்து என்று கொள்ளாலாம்.

பணமே குறிக்கோள் என்று வாழ்ந்தவன்
 தன்னேயே  மெச்சியவன்   இன்று நொந்து
ஏதும் புலப்படாமல்  தவிக்கிறான் பாவமாக.

விற்று விட்டான் மொத்த சொத்தையும்
செலவே இல்லாதவன்  தொழில் வல்லுனன்
என்று போற்றப்பட்டவன் முழிக்கிறான்  மலங்க .

ஏன் இவ்வாறு என்று அறிய முடியில்லை
நாலாப் பக்கமும் வருமானம் என்றவன்
 இன்று ஒன்றும் கையில் இல்லாமல் .

பணம் நிற்காது என்று தெரிந்தும்
 சட்டத்தை மீறி வாழ்ந்து  கண்டான்
 எதை கிடைத்தது என்ன தெரியவில்லை. 

No comments:

Post a Comment