ஏச்சும் பேச்சும் கேட்டு அலுத்துப் போய்
நமட்டுச் சிரிப்பும் ஏகத்தாளமும் பார்த்து
கொக்கரிப்பும் அட்டகாசமும் கண்டு
விக்கித்துப் போய் நிற்கும் கால்
ஏசினவன் எங்கு என்று அறிய முடியவில்லை
சிரித்தவனைக் கண்டு பிடிக்க தெரியவில்லை
கொக்கரித்தவனோ வெளியே தலைக் காட்ட வில்லை
தேடி அலைந்தும் மறைவிடம் அறியவில்லை.
பேசியே பொழுதைக் கழித்தவன் எங்கே ?
ஏகத்தாளமாகத் திரிந்தவன் எவ்விடம் ?
அட்டகாசம் செய்தவன் எங்கு சென்றான் ?
வியந்து கண் அகல நிற்கிறேன்.
நமட்டுச் சிரிப்பும் ஏகத்தாளமும் பார்த்து
கொக்கரிப்பும் அட்டகாசமும் கண்டு
விக்கித்துப் போய் நிற்கும் கால்
ஏசினவன் எங்கு என்று அறிய முடியவில்லை
சிரித்தவனைக் கண்டு பிடிக்க தெரியவில்லை
கொக்கரித்தவனோ வெளியே தலைக் காட்ட வில்லை
தேடி அலைந்தும் மறைவிடம் அறியவில்லை.
பேசியே பொழுதைக் கழித்தவன் எங்கே ?
ஏகத்தாளமாகத் திரிந்தவன் எவ்விடம் ?
அட்டகாசம் செய்தவன் எங்கு சென்றான் ?
வியந்து கண் அகல நிற்கிறேன்.
No comments:
Post a Comment