Sunday, April 10, 2016

முகம் ஒன்று தான்

முகம் ஒன்று தான்
 அதில் தான் என்ன 
 என்ன வெளிப்பாடுகள்.

புன்சிரிப்பிலே விரிந்து
 பூவாக மலர்ந்து
பொலிவுடன் திகழும்.

கவலையிலே  சோர்ந்து
கசங்கி வாடி
சோபையிழந்து  தோன்றும்.


ஆச்சரியத்தில்  வியந்து
 பரவி ஒளி  கூட்டி
கொள்ளாது விளங்கும் .


வெறுப்பில்  வதங்கி
ஒடுங்கி ஒளி குறைந்து
குணங்கி  சொடியும்.


அன்பில்  மலர்ந்து
ததும்பி  தடவி
 கருணை வடிவாகத் திகழும் .


ஆத்திரத்திலே பொங்கி
 வெடித்துச் சிதறி
ஆவேசத்தைக்   காட்டும்.


முகம் ஒன்று தான்
 அதில் தான் எவ்வளவு
கோடுகள்  குறுக்கும்
நெடுக்குமாக.






No comments:

Post a Comment