Thursday, March 31, 2016

தன்னைவிட ஒருவனா

கட்டவிழ்த்த த்த காளை  போல் திமறி னான்
கட்டுங்கடங்காமல் பேசினான் பொழுதுமே
சாடினான்  யாவரையும்  வரை முறையிலாமல்
 இகழ்ந்தான் அனைவரையும்  திக்குத்  தெரியாமல்

எதனால் இவ்வளவு  என்று கண்ட போது
ஆத்திரம் என்று ஒரு சொல்லில்  முடிக்கலாம்
அதுவன்றே குறிக்கோள்  அதனிலும் மேலே
இயலாமை  ஒன்று உள்ளடங்கியுள்ளும்


முடியவில்லையே தன்னால் எண்ணங்கள்  திரள்
கோபம் தலைக்கேற  ஆங்காரமாக
வெடித்துச் சிதறுகிறான் மனம் குமறி
சினம்  குறையை மறைக்கும் என்றாகுக.


தன்னைவிட ஒருவனா என்று ஒரு  நினைப்பு 
தலைகுப்பற  அவனை புரட்டித்    தள்ள
இறைகிறான் ஆவேசமாக  காரணமே இல்லாது
தலை குனியும் நேரம் விரைவிலே எனறறியாமல் 







No comments:

Post a Comment