Thursday, March 17, 2016

வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாமல்

ஒர்  ஊரிலே  ஒரு குடும்பம்
 வாழத் தெரியாத ஒன்று

சிக்கனம் என்று நினைத்து
 கஞ்சத்தனமாக வாழும்  குடும்பம் .


உண்ண உணவு பற்றாமல்
 உண்பதே வழக்கம்

 உடுத்தும் உடை  கசங்கலாக
உடுப்பதே  பழக்கம் .

கேட்டால் எளிமை  என்ற
பகட்டுப் பேச்சு.

குறைவில்லை இதில் மட்டும்
பேசிப்  பேசியே  வாழும் இனம்.

வாழ்கிறார்கள்  அன்றும் இன்றும்
வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாமல்




No comments:

Post a Comment