Tuesday, March 22, 2016

அலமேலு நூறாண்டு மேலாக

நூறு வயது வாழ்ந்தாள்
 நோய் நொடி இன்றி
நூற்றாண்டு கொண்டாடினாள்
 கோலாகலமாக

சுற்றாரைக் கூட்டி மகிழ்ந்தாள்
சுகமான விதத்திலே
தீங்கு என்பதே தெரியாது அவளுக்கு
நன்மையே  அவளின் நோக்கம்.

அழகுப் பேச்சு கையாண்டாள்
அழகி என்று கூற  முடியாது
வேகம் என்பது அவள் வழி
கோபம் ஆகாது அவளுக்கு.

வாழ்ந்து போனாள் அலமேலு
நூறாண்டு  மேலாக
இறந்து போனாள்  அலமேலு
கிடக்காமல்   வைக்காமல்
அவள்  போக்கிலே










No comments:

Post a Comment