Thursday, March 17, 2016

வாழ்வை முடித்து

கலங்கிய கண்ணோடு
 எழுந்திருந்த  சிறுமி
 கலக்கத்துடன் சுற்றும் 
முற்றும் கண்கள் அலை பாய
 யாரையும்  காணாது திகிலுடன்
 கண் தெறிக்க விழிக்க 
 கண்ணீர்    இப்போ அப்போ
 என்று வடிய காத்திருக்க
அம்மா என்று  கதறி
வீறிட குரல் ஓங்கி
அம்மாவைக்   காணாது
சுவரிலே சறுக்கி சாய
 கண்டேன் ஒரு சோகத்தை
 அம்மா தன் வாழ்வை  முடித்து
 சில மணி  நேரங்களுக்கு  முன்னே





No comments:

Post a Comment