Tuesday, March 15, 2016

விளக்கேற்றி வை

விளக்கேற்றி வை 
 திக்குத்  தெரியாமல் 
தத்தளிக்கிறாள் அவள் 
என்றவுடன் மிரண்டேன் 
வெகுவாக  சற்று நேரத்தில் 
 மருட்சி நீங்கி  என்னைப் புரிந்து 
 உணர்ந்தேன் நிலைமையை 
 எவ்வளவு பெரிய சொல் 
 என்று திகைத்தேன்  
 சொன்னேன்  பின்னே 
சற்று ஆசுவாசமாக 
 அவள் யாரிடம் 
 நெருக்கமாக  இருக்கிறாளோ 
 அவள்  ஏற்றட்டும்  விளக்கை
 எரியட்டும்  பிரகாசமாக 
 ஒளிரட்டும் ஒளி  விளக்காக
 நான் எங்கு வந்தேன் 
 என்று சொல்லி  திரும்பிப்
 பாராமல்  நடந்தேன் வேகமாக. 
 
 

No comments:

Post a Comment