ஆட்காட்டி விரலைக் காட்டினான்
ஆளவந்தான்.
சுட்டிக் காட்டினான் கோளாறை
ஆளவந்தான்.
தேடினான் குறையை எங்கு என்று
வாழ வந்தான் .
கண்டு பிடிக்க முயன்றான்
வாழ் வந்தான்.
கோளாறும் இல்லை முதலிலே
குறையும் இல்லை நெடுகிலே
பிடித்தார்கள் சிண்டை இருவரும்
அடித்துக் கொண்டு
நடப்பது இவ்வாறே உலகில்
எங்கும் எவ்விடமும் .
ஆளவந்தான் நானாகவும்
வாழவந்தான் நீயாகவும்
இருக்கலாம் என்றாகிய போது
சிண்டு சிக்கலாகாமல் இருந்தால்
மட்டுமே கவனி.
No comments:
Post a Comment