Friday, March 4, 2016

எட்டு முறை அடிக் கிறது கடிகாரம்

எட்டு முறை அடிக் கிறது   கடிகாரம்
  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் 
 ஓங்கி ஒலிக்கிறது  உலகளாவிய விதம்.

காலை அவசரம் திணறடிக்க
எட்டு திக்கில் ஓட்டம்
 வாயில் கொஞ்சம்  வயிற்றில் மிச்சம்
 கால் ஒன்று இங்கே மற்றொ ன்று அங்கே
 கையில் பை குடை  உணவு  என்று பறக்க
 கடிகாரம் டன்  என்றுகாரசாரமாக  ஒலிக்க
  காதில் வீழாது பரபரவென்று ஓடுகிறான்.

இதே எட்டு மணி இரவில் அறை கூவ
ஆடிக் களைத்து  ஒடி அலைந்து  வரும் மனிதன்
 கடிகாரமோ  நேரம் தவறாமல் வேலையை
 அழகாகச  செய்ய   கண்ணில்  உறக்கம்
 குடி கொண்டு ஊடலில் அசதி ஆட்கொள்ள
எட்டு மணி ஆனதே தெரியாமல் சாய்கிறான் மனிதன்.

கடிகாரம்  டன்  டன்  என்று அடிக்கிறது தன பாட்டுக்கு 



 

No comments:

Post a Comment