Wednesday, March 9, 2016

கவிதை எழுதுகிறேன்

கவிதை எழுதுகிறேன்
 இலக்கணமே தெரியாமல் 

 எதுகை மோனை துடிப்பு 
 எது வுமே  இல்லாமல் 

மனதில் தோன்றியதை 
 அவ்வவ் வாறே எழுதுகிறேன் 

ஒரு நேரம் குழந்தை அழுகிறது 
 எதற்காகஇருக்கும் என்று எழுதுகிறேன்   

ஒரு பொழுது   அழகிய மலரைப் பற்றி 
 பவளமல்லியோ குண்டு மல்லியோ 
 எழுது கிறேன் எனக்கு தெரிந்ததை  



மறு நாள் குடு ம்பம் அண்ணன் தம்பி  
 என்று எழு துகிறேன் நான் அனுபவித்ததை 


என்னென்ன எழு துவது என்ற வரைமுறை  
இல்லை என்னிடம்  எழுதுகிறேன் 
 நான் பாட்டுக்கு நேரம் தெரியாமல்.




No comments:

Post a Comment