Saturday, March 12, 2016

பலமுக இலக்கை

தேனே மானே கற்கண்டே 
 என்று விழித்தக்  காலம் போய் 
 ஸ்வீடி டார்லிங்  பிலொவெட் 
 என்று கூப்பிடும் வேளையிலே
 கணவன் பெயர் சொல்ல மறுத்து 
சொல்வதற்கு பல சாட்சிகளை அழைத்து 
 நாராயணன் என்றால் பெருமாளைத்  தேடி 
 முருகன் என்றால் குமரனை துணைக்கு கூ ப்பிட்டு
 வாழ்ந்த காலங்கள் மலையேற 
இன்று சீனு, சிவா என்று பெயர் சொல்லிக்  கூவ 
 வாடா போடா  என்று  கொஞ்சிக் குலவ 
 இலை மறை காய் மறைவாக  நடந்தவை எல்லாம் 
 வெட்ட வெளியில் அரங்கேற 
 பாரதமும் பன்முகத் தொழிலில்  சிறக்க 
கலாச்சாரமும் பலமுக  இலக்கைத் தொட 
 முன்னேற்றம் என்று நாமும் கைக் கொட்டி 
 ஆர்பரித்து சிலாகிக் றோம் மகிழ்வோடு 



.

No comments:

Post a Comment