Monday, March 28, 2016

கண்டும் தெளியவில்லை

மண் என்று ஒர்  இளக்காரம்
 மண் தானே என்ற ஓர்  அலட்ச்சியம்
மண்ணே  பொன் என்று அறியாமல் .

மண்ணாவே போவாய்
 மண்ணுக்குள்ளே போ
 என்ற ஓர் ஆங்காரம்.

 ஒரு மண்ணும்  தெரியாது
 நீ ஒரு மண்ணு மண்ணு
என்ற ஓர் உதாசினம் .

அதோடே  மண்ணாசை
 ஒரு பேராசை  என்ற
 ஓரு நீட்டிப்பு .

அதனுள்ளே மண்
 பொன்னை விட உயர்வு
என்ற ஒரு  ஆவல்.


மண்ணின் மகிமை
மண்ணின் பொறுமை
மண்ணின் வலிமை


அறியாதார் பேசும்
பேச்சு கேட்டு
முடியவில்லை.


கண்டும்  தெளியவில்லை
 என்கிற போது மனம்
கலங்குகிறது  அனேகமாக .




No comments:

Post a Comment