Sunday, March 20, 2016

செட்டி மகன் கடல் கடந்து.

கொண்டு விற்கப் போனான்
 செட்டி மகன் கடல் கடந்து.

 அன்று விட்டுச் சென்றான்  வீட்டையும்
 மனைவியையும் மக்களையும்
 செட்டி மகன் கடல் கடந்து.


 அன்று விற்றான் ஈட்டினான்
 செல்வம் பல கோடி  கோடியாக
 செட்டி மகன் கடல் கடந்து.

தன்னுடன் கூட்டிச் சென்றான்
 கூட்டாளிகளை   பலரை   பழக்க
செட்டி மகன் கடல் கடந்து

தனக்கு பலமான  துணையாக
தெண் டாயுதபாணியை  கூட்டினான்
 செட்டி  மகன் கடல் கடந்து.

அவனுக்கு கோவில் கட்டினான்
 விழா எடுத்தான்  கோலாகாலமாக
 செட்டி மகன் கடல் கடந்து.


சென்றான் பாய் மரக் கப்பலிலே
செய்கோன் , மலேயா, சிலோன், பர்மா என்று
 செட்டி மகன் கடல் கடந்து.


வாழ்ந்தான் தாய் மண்ணில் ஒரு காலும்
 மாற்று மண்ணில் மறு காலும் என்று
 செட்டி மகன் கடல் கடந்து.


  வாழ்ந்தான் நல்லதுக்கும் கெ ட்டதற்கும்  பிறந்த நாடே
 உழை ப்பிற்கும் பொருள க்கும் அயல் நாடே என்று
 செட்டி மகன் கடல் கடந்து.


 இன்று மாறுபாடு கண்டது  மனம்
  பிழைக்க  வந்த இடமே சொர்க்கம் என்று  மேலோங்க
  துவங்குகிறான் வாழ்க்கையை  செட்டி மகன் கடல் கடந்து.













No comments:

Post a Comment