Friday, March 18, 2016

மனதில் ஒரு கனம்

மனதிலே ஓர் உறுத்தல்
 சரியான வழியில்
செல்கிறோமோ  என்று.

மனதில் ஒரு நெருடல்
நான் பேசுவது  அர்த்தத்தோடு
தானோ என்று

மனதில் ஒரு ஆயாசம்
 நான் சாதித்தது
என்ன என்று .

மனதில் ஒரு வெறுப்பு
  கொஞ்சமல்ல வாழ்வது
எதற்கோ என்று.


மனதில் ஒரு கனம்
 இனம் தெரியாத
ஏன்,என்ன,எதற்கு என்று




No comments:

Post a Comment