Sunday, March 13, 2016

கண்டு கொள்ளாதே

வீட்டைக் கட்டிப் பார்
கல்யாணம் பண்ணிப் பார்
 என்றெல்லாம்  பார்த்தால்
கட்டின வீட்டுக்கு ஆயிரம் குற்றம்
 பண்ணின கல்யாணத்திற்கு
ஆயிரம்  விமர்சனம்
 எதைச் சொல்வது மிகவே
 எதை விடுவது சற்றே
 தோன்றும் யாவருக்கும்
 நரம்பில்லாத நாக்கு
புரளும் எவ்விதமே 
 கண்டு கொள்ளாதே
 ஏறக்குறையக்  கூட
கட்டு பல வீடுகள்
 நேரே செல் உன் வழியில்  

No comments:

Post a Comment