Saturday, March 12, 2016

மனிதன் மனிதனாக

நாய் ஒன்று குரை க்கிறது
 தெரு முனையிலே
இடைவிடாமல் எதற்கோ
தெரியவில்லை.

நாய் தானே என்று நடக்கிறோம்
திரும்பிப் பாராமல்
 அதுவும் ஓர் உயிர் என்று
 நினையாமல்.


 அந்த மெத்தனம் ஏனோ
 புரியவில்லை
 அசட்டையாக இருப்பது
 நியாயமே   இல்லை .


நாய் என்று ஒதுக்குவது
 சரியில்லை
உயிர் என்று மதிப்பது
நியமம் கூட


இதற்கு காரணங்கள்  கண்டு
 பிடிக்க முடியவில்லை
ஏனோ
மனிதன் மனிதனாக
 நிறைவு பெறவில்லை



No comments:

Post a Comment