Monday, July 25, 2016

சந்திரனைக் கண்டேன்

மனிதன் எதை விட்டான்?
 சந்திரனை  விட்டு வைப்பதற்கு.

ஏன் சந்திரன் மட்டும்
சிரித்துக் கொண்டு
அழகாக ஒளிர்கிறான்
என்ற எண்ணம் மேலோங்க

துவங்கி விட்டான்
 அவன் தன முயற்சியை.

கட்டினான் ஓர் ஏவுகணையை
 ஏற்றினான் வீரர்களை .

சென்றார்கள், அடைந்தார்கள்,
நின்றார்கள், நடந்தார்கள்.
 திரும்பினார்கள்.

 எதை கண்டான் மனிதன் அங்கே ?

கோடிக்கணக்கான  பணம் விரயம்
உழைப்பு வீண், நேரம் வீணடிப்பு

மார்தட்டுகிறான்
விண்ணை அடைந்தேன்
 சந்திரனைக் கண்டேன் என்று.

 சந்திரனை  இருக்கும்  இடத்திலிருந்து
காணலாமே மகிழ்வோடு.





 

No comments:

Post a Comment