Thursday, July 7, 2016

எவ்வழியில் பெருக்கினான்

பணம் பத்தும்  பண்ணும்
 என்பது அவனுக்கு
 முற்றும் பொருந்தும்.

 எளிய குடும்பத்தில்
 பிறந்தும்  அவனுக்கு
 அதில் ஏற்றமில்லை.

ஏற்றம் அடைந்தான்
 படிப்பாலே  ஓரளவு
ஏற்றம் எனில்
பணத்தாலே!

 திறமை  என்று நோக்கும் போது
 பெரிதளவு  அவனிடம்
காண முடியாது. 

எவ்வழியில் பெருக்கினான்
 என்பது அவனுக்கே
 வெளிச்சம்.

 
  பணத்தை கண்டவுடன்
 அடக்கம் அற்றுப்போய்
 அடங்காமை தலை  தூக்க
 ஆடுகிறான்  ஆடுகளம்
மிக அழகாக.

No comments:

Post a Comment