Wednesday, July 20, 2016

பச்சை

நிறங்களில் பச்சை
 பெருமிதம் கொண்டு
 அலங்காரமாக நிற்கின்றது.

  பிறந்த குழந்தையை
 பச்சை மண் என்று
 சிலாகிக்க!

செழித்து  வளரும்
 அழகை பசுமை என்று
போற்ற!

சற்று மாறாக
அப்பட்டமான  
பொய்யை
பச்சைப்  பொய்
 என்று கெக்களிக்க.

பசுந்தாழ், பசலி,
பசுமை, என்று
 வளமை  காணும்
அழகே  அழகு.


 

No comments:

Post a Comment