கேட்டலும் கேட்காததும்
தரு வதும் தராததும்
அவரவர் விருப்பம்.
கேட்டு வாங்குவதை விட
கேளாமல் கிடைப்பது மேன்மை.
கேட்டவள் இன்று
பெருகி நிற்கிறாளா?
கேளாதவள் அதற்காக
குறுகி நிற்பாளா?
அவள் தகுதி
அவள் நினைப்பு
அடித்துப் பறித்து
வாங்கினால்
சிறப்பு என்கிறாள்
மற்றவளோ
தன்மையுடன்
கேட்டும் இல்லை
என்ற போது
விலகுவதே
நயம் என்கிறாள்.
இதில் ஓர் அழகு
இருவருமே
சகோதிரிகள்!
No comments:
Post a Comment