Wednesday, October 12, 2016

கண்டில்லேன் வேறு எங்கும்.

ஒர் ஆறு   ஓடுகிறது
 அதில் கழிவும்
 வண்டலும் .கூடவே.

ஒரு சாலை  விரிந்து
 நிற்கிறது  அதில் ஊரின்
குப்பை  நிறையவே.

ஒரு  பொதுவிடமான் பேருந்து
நிலயத்திலோ எச்சலும்,
 சிறு நீரும்  நாற்றமாகவே

ஒரு பள்ளி, கல்லூரியிலோ
பாடம் பாதகமாக காகிதமும்,
 மையும் சிந்திச்  சிதறி.

எங்கும் காணின்
தொய்வானத்   தூய்மையும்
  நிரந்தரமான அழுக்கையும்.

 இந்தியத்  துணைக் கண்டத்தில்
மலிந்து நிற்கும் முரண் பாட்டை
 கண்டில்லேன்  வேறு எங்கும்.


No comments:

Post a Comment