Tuesday, October 18, 2016

குரல் என்ன செய்யும்?

பேசுபவன் முகத்தைக் காணாமலே
 தெரியும்  அவனின் நினைப்பை 
 பேசும் ஒலி  காட்டிக் கொடுக்கும்.

நினைத்ததை சொல்லாமலே 
 முகம் காட்டி விடும்.

பொய் எனில் ஓர் அதிர்ச்சி   
 மெய்  எனில் ஓர்  உவகை.

 தெரியுமே முகத்தில்  அழகாக 
 மறக்க மறைக்க முயன்றாலும் 
 தெளிவாகத் தெளியும்  பார்வையிலே !

கண்ணே பேசும் என்கிற போது 
குரல் என்ன செய்யும்?  
 கண்  காட்டுமே  நன்மையையும் 
தீமையும்.




No comments:

Post a Comment