காற்றீனிலே வரும் கீதம்
என்று கூறும் போது
காற்றே ஒரு இசை
என்று தோன்றிய தருணம்
காற்று வீசியது குளுமையாக
மெல்லத் தவழ்ந்து
முடி கற்றை கலைத்து
முகத்தை வருடி
காதிலே இசையுடன் கொஞ்சி
பரவிச் சென்றது மென்மையாக
கிறங்கி மயங்கிய நிலையில் இருக்கும் போது
காற்று வேகம் பிடித்து வீசத் தொடங்கியது
உஸ் உஸ் என்று கோரத் தாண்டவமாடியது
முகத்திலே அடித்து கதவுகளைக் காயப்படுத்தி
விறு விறு வென்று பாய்ந்து தாக்கி சூறையாடி
இயல்பு வாழ்வைப் பாதித்து
நிலை குலையவைத்தது
சற்று நேரத்தில் குறைந்து மிதமாக வீசியது
சோகமாகப் பாடியபடி
செல்லும் போது மரங்கள் தள்ளாடின
இலைகள் போல பொலவென்று உதிர்ந்தன
மழையும் துளித் துளியாக சொட்டு சொட்டாக
கசிந்து கவலையோடு இணைந்து
காற்றுடன் கலந்து மறைந்தது.
No comments:
Post a Comment