Thursday, October 10, 2013

கல்லும் காசு ஆகலாம்

சிறு சிறு மலைகள் 
வான்யுர்ந்து நிற்க 
அகன்றவெளியில் 
பயிர்கள் விளைய 
நீர் ஏற்றலும் 
குலவைப் பாட்டும் 
கும்மி அடி கோலாட்டமும் 
நிறைந்த மகிழ்ச்சியை நிரப்ப 
கண்டதெல்லாம் ஒரு மாயையோ 
ஒரு பொய்யோ என்று நினைக்க 
மலைகள் எல்லாம் உடைபட்டு 
கற்களாக மாற 
மாறிய கற்கள் 
பணமாக குவிய 
பசேலேன்ற நிலங்கள் 
புண்ணாக்காக திரிய 
மக்களை காச நோய் பிடிக்க 
இருமலும் சளியும் பாடாப் படுத்த 
தொடர் இருமலும் வலிமையான் இழுப்பும் 
வறண்ட பூமியும் வற்றின ஆற்றுப் படுகையும் 
வெறிச்சென்று தோன்ற 
செல்வச் செழிப்புடன் வாழ்ந்தான் 
கற்கள் ஆலையை உருவாக்கிய 
அதிபன் பழனிச்சாமி



No comments:

Post a Comment