சிறு சிறு மலைகள்
வான்யுர்ந்து நிற்க
அகன்றவெளியில்
பயிர்கள் விளைய
நீர் ஏற்றலும்
குலவைப் பாட்டும்
கும்மி அடி கோலாட்டமும்
நிறைந்த மகிழ்ச்சியை நிரப்ப
கண்டதெல்லாம் ஒரு மாயையோ
ஒரு பொய்யோ என்று நினைக்க
மலைகள் எல்லாம் உடைபட்டு
கற்களாக மாற
மாறிய கற்கள்
பணமாக குவிய
பசேலேன்ற நிலங்கள்
புண்ணாக்காக திரிய
மக்களை காச நோய் பிடிக்க
இருமலும் சளியும் பாடாப் படுத்த
தொடர் இருமலும் வலிமையான் இழுப்பும்
வறண்ட பூமியும் வற்றின ஆற்றுப் படுகையும்
வெறிச்சென்று தோன்ற
செல்வச் செழிப்புடன் வாழ்ந்தான்
கற்கள் ஆலையை உருவாக்கிய
அதிபன் பழனிச்சாமி
No comments:
Post a Comment