Thursday, October 10, 2013

கண்ணேறு காழ்ப்பு உணர்ச்சி கலங்கின மனம்

கண்ணேறு என்று சொல்வார்கள் 
நான் எப்போதும் நம்பவில்லை 
வாயேத்தம் என்று கூறுவார்கள் 
நான் நினைக்கவில்லை 
காழ்ப்புணர்ச்சி என்று கொள்வார்கள் 
நான் எண்ணவில்லை 
வயிற்றெரிச்சல் எனறு ஆதங்கப்படுவார்கள் 
நான் எடுத்துக்கொள்வதில்லை 
எல்லாம் நம் மனதிலே தான் 
யாவையும் நம் பார்வையிலே தான் 
என்று கருதி வந்தேன் இந்நாள் வரை 
மாறியது மனம் ஒரு சந்தர்பத்தில் 
பெருமூச்சுடன் கொடுத்த சாபம் 
நடந்தது துரிதமாக 
கண்ணீருடன் அரற்றின சொற்கள் 
கச்ச்தமாக பலித்தன அப்பவே. 
அயர்ந்து நின்ற போது 
கண் பார்வையும் வாய் பேச்சும் எரிச்சலும் தகர்த்தன நல்ல உள்ளங்களை 
கெடுத்தன நிறைந்து வந்த கொடுப்பினையை 
அழித்தன துலங்கிய நற்பெருமையை 
மண்ணிலே புதைத்தன செல்வாக்கை அதிர்ச்சியுடன் கலங்கி நிற்கிறேன் செய்வதறியாமல்



No comments:

Post a Comment