கண்ணேறு என்று சொல்வார்கள்
நான் எப்போதும் நம்பவில்லை
வாயேத்தம் என்று கூறுவார்கள்
நான் நினைக்கவில்லை
காழ்ப்புணர்ச்சி என்று கொள்வார்கள்
நான் எண்ணவில்லை
வயிற்றெரிச்சல் எனறு ஆதங்கப்படுவார்கள்
நான் எடுத்துக்கொள்வதில்லை
எல்லாம் நம் மனதிலே தான்
யாவையும் நம் பார்வையிலே தான்
என்று கருதி வந்தேன் இந்நாள் வரை
மாறியது மனம் ஒரு சந்தர்பத்தில்
பெருமூச்சுடன் கொடுத்த சாபம்
நடந்தது துரிதமாக
கண்ணீருடன் அரற்றின சொற்கள்
கச்ச்தமாக பலித்தன அப்பவே.
அயர்ந்து நின்ற போது
கண் பார்வையும் வாய் பேச்சும் எரிச்சலும் தகர்த்தன நல்ல உள்ளங்களை
கெடுத்தன நிறைந்து வந்த கொடுப்பினையை
அழித்தன துலங்கிய நற்பெருமையை
மண்ணிலே புதைத்தன செல்வாக்கை அதிர்ச்சியுடன் கலங்கி நிற்கிறேன் செய்வதறியாமல்
No comments:
Post a Comment