Thursday, October 10, 2013

குயிலின் இசை

காற்றோடு கலந்த வந்த 
குயிலின் இசை 
மழையோடு இணைந்து 
சன்னமாக ஒலிக்க 
பகலவன் தோன்றும் போது 
கேட்ட கீதம் 
நாள் பொழுதும் 
நின்று இதமாக வருட 
சுக போகமான இன்பம் நல்க 
ஓர் ஒளி மயமான காலத்தை 
சுட்டிக் காட்டுவது போல்அமைய 
ஒரு தன்னிச்சையான 
செயல் போலே தோற்றமளிக்க 
அந்த நிகழ்வு மிகுந்த 
சலனமே இல்லாத ஏறக்குறைய 
நிரந்தரமான இதத்தை 
நிர்ச்சலனமான அமைதியை 
அன்போடு அரவணைத்து 
முத்தமிட்டு அளிக்க 
இந்த் மகா அனுபவம் கொடுத்த ஆற்றல் 
மனதை இலகுவாக்கி 
புளாங்கிதமடைய வழி கோல 
அன்று முழவதும் ஒரு 
உணர்வு தன்னிலை மறக்க 
ஒஒரு குட்டிக் குயிலின் இசை 

என்று பலர் உதாசினபடுத்த 
என் போன்ற இசை பைத்தியங்களுக்கு 
அது தேவ கீதமாக பரவி 
நெஞ்சுருக வைத்தது. .



No comments:

Post a Comment