Wednesday, October 16, 2013

குறை கழிந்து நிறை அறிந்து

குறை காண்கிறோம்
எதிலும் எப்போதும்
 நிறையே இல்லையா
 என்று நினைக்கையில்
 ஆயிரம் ஆயிரம்
 அலைகள் முன் நிற்கின்றன
கறுப்பு என்றால் வெறுப்பு
குட்டை என்றால் கடுப்பு
குண்டு என்றால் கேலிக்கிடம்
ஒல்லி என்றாலோ பரிதாபம்
நெட்டை என்னும் போது நகைப்பு
முக்குச் சப்பை, இடுங்கிய கண்கள்
 மேட்டு நெற்றி , தூக்கிய  பல்
 என்று  அடுக்கிக் கொண்டே
போகலாம்  நெடுகிலும்
தெரியாத பலவினங்கள்
எத்தனை எத்தனையோ
மூடியும்  மறைந்தும்
கண்டும் காணாமல்
நிறைகளை அறிந்து
நடப்பது நல்வாழ்வு.

No comments:

Post a Comment