Sunday, October 13, 2013

ஒன்பது இரவுகள்

ஒன்பது இரவுகள்
 அற்புதமான  இரவுகள்
 மாலை கவியும் நேரம்
 பொம்மைகளின கொண்டாட்டம்
 இறைவனின்  அருள் குவிய
 இறைவிகளின்   அன்பு ததும்ப
தலைவர்களின் கடமை விரிய
கடை விரித்து வர்த்தகம் பெருக
கோலாட்டம் ஒங்க
நாட்டியம் துவங்க
 பூங்காவும், மைதானமும்
அழகாகப்  பொருந்த
பூக்களும் மரங்களும்
 கவாச்சியாக்த்    துலங்க
ஒன்பது நாட்களும்
 இறை உணர்ச்சி  மேலோங்க
பெண்களும் குழந்தைகளும்
 தாம்பூலம் பெற்று
வினயமாக வினவி
 கலந்து பாட்டும்
ஆடலும் கேளிக்கையும்
மனமுருகி நெகிழ்ந்து
எல்லாம் வல்ல  இறைவனுடன் உறவாடி
 மகிழ்வுடன் வாழும் இனிமை
 வேறு எங்கும் கண்டில்லோன்
இந்திய  நாட்டின் தனி வளமை
தனிப்பட்ட சிறப்பு

No comments:

Post a Comment